2012-06-13 16:53:05

கவிதைக் கனவுகள் - எதை வெற்றி என்பது?


பிரச்சனைகளுடனேயே பிறந்தவரும் இல்லை
இறக்கும்போது கொண்டு செல்பவரும் இல்லை
வாழ்ந்துதான் ஆகவேண்டும் பிரச்சனைகளுடன்.
தனிமையை நாடுவதும் தப்பியோடுவதும் தீர்வாகாது.
பிறர் பிரச்சனையில் சுகம் காண்பதும்,
நம் பிரச்சனையில் சுய அனுதாபம் தேடுவதும்
பிரச்சனையிலிருந்து பிரச்சனை பிறப்பதற்கே வழியாகும்.
விட்டுக்கொடுப்பதும், விற்றுப் பிழைப்பதும்
அவரவர் அணுகு முறை.
பலம்... பலவீனம் சார்ந்து அது உள்ளது.
வடிகால் இல்லாப் பிரச்சனைகள் உள்குடலில்
புண்ணாய் மாறிவிடும்.
வாழ்க்கையின் வெற்றியே போராட்டத்தில்தானே!
பிரச்சனை இல்லையென்றால், வாழ்க்கை தேக்கமடைந்துவிடும்.
போராட்டமும், பிரச்சனையும் இல்லையென்றால்,
எதை வெற்றி என்பது?








All the contents on this site are copyrighted ©.