2012-06-12 16:11:46

பிலிப்பீன்ஸில் அமெரிக்க ஐக்கிய நாட்டுப் படைவீரர்கள் அதிகரிக்கக்கூடும், கிறிஸ்தவத் தலைவர்கள் கவலை


ஜூன்12,2012. பிலிப்பீன்ஸ்க்கும் அமெரிக்க ஐக்கிய நாட்டுக்கும் இடையே இராணுவ ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கு, பிலிப்பீன்ஸ் அரசுத்தலைவர் Benigno Aquinoவும் அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் Barack Obamaவும் ஒத்திணங்கியதைத் தொடர்ந்து, பிலிப்பீன்ஸில் அமெரிக்க ஐக்கிய நாட்டுப் படைகளின் இருப்பு அதிகரிக்கக்கூடும் என பிலிப்பீன்ஸ் கிறிஸ்தவத் தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இத்திங்களன்று இடம்பெற்ற இவ்வொப்பந்தம், பிலிப்பீன்சின் சுதந்திரம் மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று அந்நாட்டின் கிறிஸ்தவ ஒன்றிப்பு அவை கூறியது.
பிலிப்பீன்ஸிக்கு அமெரிக்க ஐக்கிய நாட்டுப் படைகள் மீண்டும் வருவது பிலிப்பீன்ஸ் மக்களின் இறையாண்மையைப் பாதிக்கும் என்று அவ்வவை வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
கடந்த ஏப்ரலில் சுமார் ஆறாயிரம் அமெரிக்க ஐக்கிய நாட்டுப் படைகள் பிலிப்பீன்ஸ் படைகளுடன் சேர்ந்து பயிற்சி செய்தன என்று ஊடகங்கள் கூறுகின்றன.








All the contents on this site are copyrighted ©.