நைஜீரியப் பேராயர் : சமய ஒழிப்பு நடவடிக்கையோடு அல்ல, மாறாக குற்றவாளிகளோடு
போராடிக் கொண்டிருக்கிறோம்
ஜூன்12,2012. நைஜீரியாவில் அண்மையில் நடத்தப்பட்டுள்ள கிறிஸ்தவர்க்கு எதிரானத் தாக்குதல்களுக்கு
மத விரோதப்போக்கு காரணம் என்பதில் தனக்கு நம்பிக்கையில்லை என்று அந்நாட்டு ஆயர் பேரவைத்
தலைவர் பேராயர் Ignatius Ayau Kaigama கூறினார். மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில்
இஞ்ஞாயிறன்று இடம்பெற்ற குண்டுவைப்புத் தாக்குதல்கள் குறித்துப் பேசிய பேராயர் Kaigama,
திருஅவையை மேற்கத்திய கலாச்சாரத்தின் உருவகமாக நோக்கி, அதனைத் தங்களது எதிரியாக நோக்கும்
குற்றக்கும்பல்களோடு தாங்கள் போராடிக்கொண்டிருப்பதாகக் கூறினார். ஆயினும் இந்தக் கண்ணோட்டமானது,
நைஜீரியாவில் பெரும்பான்மையான முஸ்லீம்களின் கண்ணோட்டமாகத் தான் கருதவில்லை என்றும் ஜோஸ்
பேராயர் Kaigama கூறினார். தங்களது இலக்கை இழந்துவிட்ட குற்றக்கும்பல்களே கிறிஸ்தவ
வழிபாட்டுத்தலங்களைத் தாக்குகின்றன எனவும், இந்த வன்முறைச் செயல்கள் மூலம் அவர்கள் அடைய
விரும்புவது என்ன என்று யாருக்குமே தெரியவில்லை எனவும் பேராயர் கூறினார்.