மகிழ்ச்சி என்பது வேறொன்றும் இல்லை.. மனசின் கொள்ளளவு..! மழைகொண்டு
வருகிறது சமதர்ம மேகம் குவளையில் பிடித்தால் ஒருவேளை மகிழ்ச்சி குடத்தில் பிடித்தால்
ஒருநாள் மகிழ்ச்சி குளத்தில் பிடித்தால்.. வருடமெல்லாம் மகிழ்ச்சி எது உன் மனசு..? குவளையா?
குடமா? குளமா? இல்லை.. குழப்பமா..?
குழந்தைபோல் மனம் இருந்தால் குழப்பமே இல்லை உன்னை
சண்டையிட்டு, மண்டியிட்டு கேட்கிறேன் காலமே... என் எலும்புகளுக்கும், திசுக்களுக்கும்
வயசாகட்டும் மனசுமட்டும் எப்போதும் குழந்தையாய் இருக்கட்டும்..!