எய்ட்ஸ் நோயை ஒழிப்பதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்க வேண்டும் - ஐ.நா.உயர் அதிகாரிகள்
வலியுறுத்தல்
ஜூன்12,2012. எய்ட்ஸ் நோயையும் அந்நோய்க்குக் காரணமாகும் HIV நோய்க் கிருமிகளையும் ஒழிப்பதில்
மிகப்பெரும் முன்னேற்றத்தை அடைந்துள்ளபோதிலும், இந்நோயை ஒழிப்பதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்க
வேண்டும் என்று ஐ.நா.உயர் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். எய்ட்ஸ் நோய்த் தாக்குதல்,
இந்நோயால் இறப்பு போன்றவற்றைப் பூஜ்ஜியத்துக்குக் கொண்டுவருவதற்கான இலக்கை அடைவதற்கு
அதற்கானத் தற்போதைய தடுப்பு நடவடிக்கைகளை இரண்டு மடங்காக்க வேண்டுமென Nassir Abdulaziz
Al-Nasser கூறினார். எய்ட்ஸ் நோய்க் குறித்து கடந்த ஆண்டில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தைத்
தொடர்ந்து உலகில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து பரிசீலிப்பதற்காக இத்திங்களன்று
நடைபெற்ற பொதுஅவையின் தலைவர் Al-Nasser இவ்வாறு கூறினார். 2015ம் ஆண்டுக்குள் இந்நோய்க்
கிருமிகளால் புதிதாகத் தாக்கப்படுபவரின் எண்ணிக்கையை 10 இலட்சமாகக் குறைப்பதற்கு நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.