2012-06-09 15:03:30

பீகாரில் 40 நாட்களில் 74 குழந்தைகள் பலி


ஜூன்09,2012. பீகாரில், மூளை தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டு, கடந்த 40நாட்களில் மட்டும், 74 குழந்தைகள் இறந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்துப் பேசிய பீகார் மாநில முதன்மைச் செயலர் அமர்ஜித் சின்கா, பீகாரில், அண்மைக்காலமாக மூளை தொடர்பான நோய்களால் குழந்தைகள் அதிகப் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர் என்று கூறினார்.
கடந்த 40 நாட்களில், மூளை தொடர்பான நோய்களால், 197 குழந்தைகள் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 74 குழந்தைகள் இறந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.