2012-06-09 14:47:48

கவிதைக் கனவுகள் - ஆண்டவன் நடத்தும் விருந்து...


அரியதோர் விருந்தினை
அனைவரும் பகிர்ந்திட
ஆண்டவன் அழைக்கின்றார் – தன்னை
விருந்தாய் அளிக்கின்றார்

அன்றொரு நாள் மாலையிலே
ஆண்டவன் நடத்திய விருந்திதுவே
மண்ணிலே வாழ்வது பிறருக்கென்றே
மன்னவன் சொன்னார் செயல்களிலே
தன்னுடல் பகிர்ந்தே தருகின்றார்
நம்மையும் அவர் வழி அழைக்கின்றார்

பரமனின் விருந்தினில் பாசமுண்டு
அயலவன் அன்புக்குப் பாடமுண்டு
விருந்தினில் அனைவர்க்கும் உரிமையுண்டு
இருப்பதைப் பகிர்ந்திட அழைப்பு உண்டு
கலங்கிடும் மனங்களில் கீதமுண்டு
தியாகத்தை வளர்த்திடும் தாகமுண்டு








All the contents on this site are copyrighted ©.