2012-06-09 15:02:43

ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நாள்களில் உலகில் அமைதிக்காகச் செபம்


ஜூன் 09,2012. இலண்டனில் வருகிற ஜூலையில் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடைபெறும் நாள்களில், நாடுகளில் போர்நிறுத்தம் கடைப்பிடிக்கப்படவேண்டுமென்பதை வலியுறுத்தி இவ்வெள்ளியும் இச்சனிக்கிழமையும் இலண்டனில் செப வழிபாடு நடைபெற்றது.
Pax Christy அமைப்பு ஏற்பாடு செய்த இச்செப வழிபாட்டில் கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள், முஸ்லீம்கள் எனப் பலநாடுகளின் பல்வேறு மதத்தவர் கலந்து கொண்டனர்.
வருகிற ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 12 வரை இலண்டனில் கோடைகால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவிருக்கின்றன.
மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகள் வருகிற ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 9 வரை நடைபெறும்.








All the contents on this site are copyrighted ©.