ஜூன்09,2012. அயர்லாந்து நாட்டு டப்ளின் நகரில் 50வது அனைத்துலக திருநற்கருணை மாநாடு
இஞ்ஞாயிறன்று ஆரம்பமாகின்றது. “திருநற்கருணை : கிறிஸ்துவோடும் நம்மோடும் ஒன்றிப்பு”
என்ற தலைப்பில் இம்மாதம் 10 முதல் 17 வரை இம்மாநாடு நடைபெறுகின்றது. நான்கு ஆண்டுகளுக்கு
ஒருமுறை வெவ்வேறு நாடுகளில் நடைபெறும் இம்மாநாட்டில், திருநற்கருணை நமது வாழ்வின் மையம்
என்பதை வலியுறுத்தும் திருவழிபாடுகள், கலாச்சார நிகழ்வுகள், மறைக்கல்வி, சாட்சியக் கூட்டங்கள்,
பயிற்சிப்பாசறைகள் போன்றவை நடைபெறும். இந்த டப்ளின் மாநாட்டில் சுமார் 70 ஆயிரம் பேர்
பங்கு கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.