2012-06-07 15:19:03

இந்தோனேசிய அருள்பணியாளருக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு விருது


ஜூன்,07,2012. இயற்கை மீதும் சுற்றுச்சூழல் மீதும் மக்கள் ஆழ்ந்த ஈடுபாடு கொள்ளவேண்டும் என்பதை நான் என் வாழ்வின் மூலம் உணர்த்த முயன்று ஓரளவு வெற்றியும் கண்டுள்ளேன் என்று இந்தோனேசியாவில் வாழும் கப்பூச்சின் துறவுமடத் தலைவர் அருள்பணியாளர் Samuel Oton Sidin, கூறினார்.
சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பணிகளில் சிறந்தோருக்கு இந்தோனேசிய அரசு ஒவ்வோர் ஆண்டும் சுற்றுச்சூழல் நாளன்று 'கல்பதரு' என்ற விருதை வழங்கி வருகிறது.
இச்செவ்வாயன்று சிறப்பிக்கப்பட்ட உலகச் சுற்றுச்சூழல் நாளையொட்டி இந்தோனேசிய அரசு 12 பேருக்கு இவ்விருதை வழங்கியது. இவர்களில் அருள்பணியாளர் Oton Sidinம் ஒருவர்.
அருள்பணியாளர் Oton Sidin, Kubu Raya என்ற மாவட்டத்தில் 'வானவில்லின் இல்லம்' என்ற பொருள்படும் Rumah Pelangi என்ற ஒரு பாதுகாப்பான பகுதியை உருவாக்கி, அங்கு பல்வேறு மரங்களை கடந்த 15 ஆண்டுகளாக வளர்த்து வருகிறார் என்று UCAN செய்திக் குறிப்பு கூறுகிறது.
அருள்பணியாளர் Oton Sidinக்குக் கிடைத்துள்ள இந்த விருதைக் குறித்து தங்கள் மகிழ்வை வெளியிட்டுள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், இவரது முயற்சி அடுத்த தலைமுறைக்கு நல்ல பாடமாக அமையும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.