இயற்கை மருத்துவ முறைகள் வழியாக நோயுற்றோருக்கு முழுமையான நலம் வழங்க முடியும் - அருள்
சகோதரி வலேரியன்
ஜூன்,06,2012. Allopathy எனப்படும் மருத்துவ முறைக்கு மாற்றாக அமையும் இயற்கை மருத்துவ
முறைகள் வழியாக நோயுற்றோருக்கு நீடித்த, முழுமையான நலம் வழங்க முடியும் என்று அருள் சகோதரி
வலேரியன் கூறினார். இச்செவ்வாயன்று கடைப்பிடிக்கப்பட்ட உலகச் சுற்றுச்சூழல் நாளையொட்டி
ஆசிய செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த அருள்சகோதரி வலேரியன் இவ்வாறு கூறினார். மும்பையின்
Bandra பகுதியில் பணிபுரியும் PDDM என்ற அமைப்பின் தலைவரான அருள்சகோதரி வலேரியன், மக்களின்
முழுமையான உடல், மன நலன்களை உருவாக்கும் பணிகளில் தங்கள் அமைப்பினர் ஈடுபட்டு வருவதைக்
குறித்துப் பேசினார். தென் கொரியா, சீனா ஆகிய நாடுகளிலிருந்து கற்றுக்கொண்ட மருத்துவ
முறைகளுடன் இந்திய மண்ணில் உருவான பல மருத்துவ முறைகளையும் இணைத்து, மக்களுக்கு முழு
நலனை வழங்கும் பணிகளில் இவ்வமைப்பைச் சார்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று ஆசிய செய்திக்
குறிப்பொன்று கூறுகிறது.