2012-06-02 14:36:43

கவிதைக் கனவுகள் மழலையரே மகிழ்வீர்...


மழலையரே, மனம் மகிழ்வீரே - இறை
அரசினிலே இடம் பெறுவீரே
சிந்துகின்ற தேன்மலர்ச் சிரிப்பினிலே
விண்ணுலகின் பேரின்பம் பிறந்திடுமே - குழல்
மிஞ்சுகின்ற மழலை உன் மொழிதனிலே
விண்ணகத்தின் பெருமைகள் புரிந்திடுமே

தத்திவரும் தளிர் உந்தன் நடை கண்டே
சத்தியவிண் கதவுகள் திறந்திடுமே - சிறு
கள்ளமேதும் கலந்திடா மனம் கண்டே
வெள்ளமென அருள்மழை பொழிந்திடுமே
மழலையரே, மனம் மகிழ்வீரே - இறை
அரசினிலே இடம் பெறுவீரே








All the contents on this site are copyrighted ©.