மழலையரே, மனம் மகிழ்வீரே - இறை அரசினிலே இடம் பெறுவீரே சிந்துகின்ற தேன்மலர்ச்
சிரிப்பினிலே விண்ணுலகின் பேரின்பம் பிறந்திடுமே - குழல் மிஞ்சுகின்ற மழலை உன்
மொழிதனிலே விண்ணகத்தின் பெருமைகள் புரிந்திடுமே
தத்திவரும் தளிர் உந்தன் நடை
கண்டே சத்தியவிண் கதவுகள் திறந்திடுமே - சிறு கள்ளமேதும் கலந்திடா மனம் கண்டே வெள்ளமென
அருள்மழை பொழிந்திடுமே மழலையரே, மனம் மகிழ்வீரே - இறை அரசினிலே இடம் பெறுவீரே