ஏறக்குறைய 2 கோடியே 10 இலட்சம் பேர் கட்டாய வேலைக்குப் பலியாகியுள்ளனர்- ஐ.நா.அறிக்கை
ஜூன்02,2012. உலக அளவில் ஏறக்குறைய 2 கோடியே 10 இலட்சம் பேர், வேலைகளில் வலுக்கட்டாயமாகத்
தடுத்து வைக்கப்பட்டு அல்லது ஏமாற்றப்பட்ட நிலையில் வேலை செய்து வருகின்றனர் என்று ILO
என்ற உலக தொழில் நிறுவனம் இவ்வெள்ளியன்று வெளியிட்ட புதிய அறிக்கை கூறுகிறது. உலகஅளவில்
கட்டாய வேலைக்குப் பலியாகியிருப்போரில் 2 கோடியே 9 இலட்சம் பேர் ஆசிய-பசிபிக் பகுதியைச்
சேர்ந்தவர்கள் எனவும், அதற்கு அடுத்த நிலையில் ஆப்ரிக்காவும் இலத்தீன் அமெரிக்காவும்
உள்ளன எனவும் அவ்வறிக்கை மேலும் கூறுகிறது. கொத்தடிமை, மனித வியாபாரம் மற்றும் நவீன
அடிமைத்தனங்கள் இந்தக் கட்டாய வேலையில் உள்ளடங்கும் எனக்கூறும் அவ்வறிக்கை, நலிவடைந்த
பெண்களும் சிறுமிகளும் பாலியல் தொழிலுக்குக் கட்டாயப்படுத்தப்படல், கொத்தடிமைத்தனத்தில்
சிக்குண்டுள்ள குடியேற்றதாரர்கள், பண்ணைகளில் வேலை செய்வோர் போன்றோரும் இதில் உள்ளடங்குவர்
எனவும் குறிப்பிட்டுள்ளது.