ஜூன்02,2012. திருமணம் முடிந்த 60 நாளில் அதைப் பதிவு செய்வதைக் கட்டாயமாக்கும் மசோதா
புதுடெல்லி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருமணத்தை 2 மாதத்தில் பதிவு
செய்யத் தவறினால், அந்தத் தம்பதியருக்கு 10,000 ரூபாய் அபராதம் விதிக்க மசோதாவில் வழிவகை
செய்யப்பட்டுள்ளது. திருமணப்பதிவுகளை எளிதாக்க வேண்டும் என்று டெல்லி மாநில அரசுக்கு
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து திருமணப் பதிவுக்கான புதிய சட்டத் திருத்த மசோதாவை
அரசு தயாரித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்த ஆலோசனைகளின்பேரில் திருமணப்
பதிவுகள், இந்த மசோதா மூலம் மிக எளிதாகப்பட்டுள்ளது. புதிய மசோதாவின்படி, டெல்லியில்
நடக்கும் அனைத்துத் திருமணங்களும், டெல்லியைச் சேர்ந்தவர்களின் திருமணங்களும் பதிவு செய்யப்படுவது
கட்டாயமாகிறது.