வட இத்தாலியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்குத் திருத்தந்தையின் அனுதாபத்
தந்தி
மே,31,2012. வட இத்தாலியில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கும் காயமடைந்துள்ளோரின்
குடும்பங்களுக்கும் தன் அனுதாபங்களையும், செபங்களையும் தெரிவிப்பதாகத் திருத்தந்தை 16ம்
பெனடிக்ட் கூறினார். மேமாதம் 29, இச்செவ்வாயன்று வட இத்தாலியில் Modena எனுமிடத்தில்
ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 17 பேர் உயிரிழந்தனர், 200க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட
அனைவருக்கும் தன் அனுதாபங்களையும், அருகாமையும் வெளிப்படுத்தி, Modena-Nonantola உயர்மறைமாவட்ட
பேராயர் Antonio Lanfranchi அவர்களுக்கு திருத்தந்தையின் சார்பில் தந்தியொன்றை அனுப்பியுள்ளார்
திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிசியோ பெர்தோனே. கடந்த 10 நாட்களுக்குள் வட இத்தாலியில்
இரு நிலநடுக்கங்கள் ஏற்பட்டு, பல பழமை வாய்ந்த கட்டிடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கானோர்
வீடுகளை இழந்து தற்காலிகக் கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேமாதம் 20ம் தேதி
நிகழ்ந்த நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களின் துயர்துடைப்புப் பணிகளுக்கு திருத்தந்தை
அண்மையில் நிதி உதவிகளை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.