நேர்காணல் – இலவசக் கல்வி பெறும் உரிமைச் சட்டம் பாகம் 2
மே31,2012. நேயர்களே, தமிழக அரசு கொண்டு வந்துள்ள கட்டாய இலவசக் கல்வி பெறும் உரிமைச்
சட்டம் குறித்து, அருட்பணி தஞ்சை டோமி அவர்கள் விளக்கியதைக் கடந்த வாரம் கேட்டீர்கள்.
கட்டாயக் கல்வி பெறும் உரிமைச் சட்டத்தினால் ஏற்படும் நன்மை, தீமைகள் பற்றியும், இச்சட்டத்தில்
கவனிக்கப்படவேண்டிய 6 அம்சங்களில் 5 அம்சங்கள் பற்றியும் இவர் விளக்கினார். இச்சட்டத்தில்
கவனிக்கப்பட வேண்டிய கடைசி அம்சம் குறித்தும், இச்சட்டத்தின் உள்நோக்கம், இச்சட்டம் பொது
மக்களை எந்த அளவுக்குச் சென்றடைந்துள்ளது என்பது குறித்தும், சிறுபான்மை கல்வி நிறுவனங்களின்
இன்றைய நிலை குறித்தும் இன்று விளக்குகிறார் அருட்பணி தஞ்சை டோமி. இவர் “நம் வாழ்வு”
என்ற வார இதழ் ஆசிரியர். இவ்விதழ் தமிழக ஆயர் பேரவையின் தனிப்பெரும் வார இதழாகும்.