பொதுநிலையினருடன் உறவுகளை மேம்படுத்த பம்பாய் உயர்மறைமாவட்டம் திட்டம்
மே29,2012. பம்பாய் உயர்மறைமாவட்டம் பொதுநிலை விசுவாசிகளுடன் உறவை மேம்படுத்தும் வழிகளைத்
திட்டமிட்டு வருவதாக அறிவித்துள்ளது. பம்பாய் உயர்மறைமாவட்டம் தான் விரும்பும் வழிகளில்
மக்களைச் சென்றடையவும், பிரச்சனைகளை எதிர்நோக்கும் மக்களை எவ்வாறு சந்திப்பது என்பது
குறித்தும் பரிசீலித்து வருவதாக, இந்நடவடிக்கையை செயல்படுத்துவதற்கு உருவாக்கப்பட்டுள்ள
குழுவின் ஒருங்கிணைப்பாளர் அருட்பணி கில்பெர்ட் தெ லீமா கூறினார். Goregaon புனித
பயஸ் குருத்துவக் கல்லூரியில் வருகிற நவம்பர் 14 முதல் 16 வரை இது குறித்த ஆலோசனை கூட்டம்
நடத்துவதற்கு பம்பாய் கர்தினால் Oswald Graciasஅழைப்பு விடுத்திருப்பதாகவும்
அருட்பணி தெ லீமா தெரிவித்தார். பம்பாய் உயர்மறைமாவட்டத்தின் இம்முயற்சிக்கு உதவும்
நோக்கத்தில், நிர்மலா நிக்கேதன் நிறுவனம் பொது மக்களிடமிருந்து கருத்துக் கேட்கும் பணியைச்
செய்யவிருப்பதாகவும் அவர் கூறினார். இத்தகைய முதல் கருத்துக்கணிப்பு 1980ம் ஆண்டில்
அருட்பணியாளர்களிடம் எடுக்கப்பட்டது.