2012-05-29 15:36:45

கவிதைக் கனவுகள் - வாழ்க்கை என்பது!”


"காவியப்பூங்கா!" என்ற வலைதளத்தில் ஸ்ரீஸ்கந்தராஜா எழுதிய கவிதை இது

வாழ்க்கை என்பது
இனிமையானது!
வருவது எதனையும்
ஏற்றுக்கொள்!

வாழ்க்கை என்பது
இன்பம் தருவது!
இருப்பது எதனையும்
பகிர்ந்து கொடு!

வாழ்க்கை என்பது
அனுபவமானது!
வீழ்ந்தபோதும்
எழுந்து நில்!

வாழ்க்கை என்பது
முத்தி தருவது!
இல்லறம் என்னும்
நல்லறம் பேண்!

வாழ்க்கை என்பது
விசித்திரமானது!
காட்டிய வழியில்
பயணம் செய்!








All the contents on this site are copyrighted ©.