2012-05-28 15:56:57

திருவனந்தபுரம் அன்னைமரியாவின் பேராலயத்தில் அவசர கால மருத்துவ உதவிகள் செய்வோருக்குப் பாராட்டு விழா


மே,28,2012. அவசரகால மருத்துவ உதவிகளில் ஈடுபடுவோர், மனித உயிர்கள் மீது நாம் அனைவரும் கொண்டிருக்க வேண்டிய மதிப்பை நமக்குச் சொல்லித் தருகின்றனர் என்று கத்தோலிக்க சீரோ மலங்கராத் திருஅவையின் தலைமைப் பேராயர் Baselios Cleemis கூறினார்.
திருவனந்தபுரத்தில் அமைதியின் அரசியான அன்னைமரியாவின் பேராலயத்தில் அவசர கால மருத்துவ உதவிகள் செய்வோரைப் பாராட்டும் விழா இச்சனிக்கிழமையன்று நடத்தப்பட்டது. அவ்விழாவில் உரையாற்றிய பேராயர் Baselios Cleemis, இப்பணியில் ஈடுபடுவோர், மத வேறுபாடுகள் ஏதுமின்றி உழைத்தாலும், மக்கள் இன்னும் இப்பணியாளர்களைச் சரிவர புரிந்து கொள்ளவில்லை என்று எடுத்துரைத்தார்.
ஈராண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சேவையின் மூலம் இதுவரை 42,000க்கும் அதிகமான நேரங்களில் மக்களுக்கு மருத்துவ உதவிகள் கிடைத்துள்ளன என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
அன்னை மரியா பேராலயம் இந்தப் பணியாளர்களை பாராட்டும் விழாவை ஏற்பாடு செய்திருப்பது, கத்தோலிக்கத் திருஅவை உயிர்கள் மீது கொண்டுள்ள மதிப்பைச் சுட்டிக்காட்டுகிறது என்று இவ்விழாவில் கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர் முரளீதரன் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.