2012-05-26 15:57:01

மூன்று நாடுகளில் சக்திமிக்க புதிய தொலைநோக்கி


மே26,2012. உலகின் மிக அதிக சக்திவாய்ந்த வானொலி அலை தொலைநோக்கி தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய மூன்று நாடுகளிலும் அமையப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மூவாயிரம் வானொலி மின்னலைக் கொடிகள் கொண்டு உருவாகும் பிரம்மாண்ட தொலைநோக்கி, ஒன்றோடு ஒன்று விலகிச் சென்று கொண்டிருக்கும் நூறு கோடி அண்டங்களை அலசிக் கணக்கெடுக்கவுள்ளது.
தற்போது பயன்பாட்டில் இருந்து வருகின்ற தொலைநோக்கியைவிட பத்தாயிரம் மடங்கு வேகமாகவும், ஐம்பது மடங்கு துல்லியமாகவும் இந்தப் புதிய தொலைநோக்கி செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.