2012-05-26 15:56:32

சமய சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் அனைத்து விசுவாசிகளும் ஒன்றுசேர்ந்து செயல்படுமாறு பால்டிமோர் பேராயர் வலியுறுத்தல்


மே26,2012. சமய சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் அமெரிக்க ஐக்கிய நாட்டு விசுவாசிகள் ஒன்றுசேர்ந்து செயல்படுமாறு கேட்டுக்கொண்டார் பால்டிமோர் பேராயர் வில்லியம் லோரி.
வாஷிங்டனில், தேசிய சமய சுதந்திர விருதைப் பெற்று உரையாற்றிய பேராயர் லோரி, அமெரிக்க ஐக்கிய நாட்டில் பெருமெண்ணிக்கையில் இருக்கும் ஆயர்களும் கத்தோலிக்கரும், அந்நாட்டின் தற்போதைய சமயச்சார்பற்ற தீவிரப் போக்குக்கு எதிராகப் போராடாமல் இருக்க முடியாது என்று கூறினார்.
சமய நிறுவனங்கள், தங்களது அறநெறிப் போதனைகளுக்கு எதிராகச் செயல்படுவதற்குத் தற்போது முதன்முறையாகக் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் என்றும் பேராயர் குறை கூறினார்.








All the contents on this site are copyrighted ©.