மே24,2012. அமெரிக்கக் கண்டத்தில் சட்டத்துக்குப் புறம்பே இடம்பெறும் குடியேற்றங்கள்
ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து ஆராயும் நோக்கத்தில் அக்கண்டத்தின் ஆயர்கள் வரும் வாரத்தில்
தொமினிக்கன் குடியரசில் கூட்டம் நடத்தவுள்ளனர். இம்மாதம் 28 முதல் 30 வரை நடைபெறும்
இக்கூட்டத்தில் அமெரிக்க ஐக்கிய நாடு, மெக்சிகோ, மத்திய அமெரிக்க நாடுகள் மற்றும் கரீபியன்
நாடுகளின் ஆயர்கள் கலந்து கொள்வார்கள் என்று பீதெஸ் செய்தி நிறுவனம் அறிவித்தது. குடியேற்றதாரரின்
சொந்த நாடுகள் மற்றும் அவர்கள் வாழும் நாடுகளில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், இன்னும்
இவர்களுக்குத் திருஅவையின் மேய்ப்புப்பணிகள் குறித்து இக்கூட்டத்தில் கலந்து பேசப்படும்
எனவும் பீதெஸ் அறிவித்தது.