2012-05-24 16:03:58

எல் சால்வதோரில் வன்முறைக் கும்பல்கள் தாக்குதல்களை நிறுத்துவதற்கு சான் சால்வதோர் பேராயர் வலியுறுத்தல்


மே24,2012. மத்திய அமெரிக்க நாடான எல் சால்வதோரில் இரண்டு போட்டி வன்முறைக் கும்பல்கள் தாக்குதல்களை நிறுத்துவதற்கு எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளுக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார் சான் சால்வதோர் பேராயர் ஹோசே லூயிஸ் எஸ்கோபார் அலாஸ்.
இந்தக் கும்பல்களுக்கிடையே போர் நிறுத்தம் ஏற்படுவதற்கானப் பேச்சுவார்த்தையில் இடைநிலை வகிக்கும் அந்நாட்டு இராணுவ ஆன்மீக ஆலோசகர் பேராயர் Fabio Colindres வின் முயற்சிகளுக்குத் தனது ஆதரவையும் தெரிவித்துள்ளார் சான் சால்வதோர் பேராயர் எஸ்கோபார் அலாஸ்.
Mara Salvatrucha, Mara-18 ஆகிய இரண்டு முக்கிய வன்முறைக் கும்பல்களால் அந்நாட்டில் அண்மை ஆண்டுகளாக மக்களின் உயிரிழப்புக்கள் அதிகரித்துள்ளன. மேலும், ஒரு இலட்சம் குடிமக்களுக்கு 65 கொலைகள் வீதம் நடந்து வரும் எல் சால்வதோர் நாடு இலத்தீன் அமெரிக்காவில் வன்முறை மிகுந்த நாடுகளில் இரண்டாவது இடத்தையும் கொண்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.