2012-05-24 16:01:45

இந்தியாவின் 200 கோடி டாலர் தெற்காசிய உதவித் திட்டம்


மே24,2012. தெற்காசிய நாடுகளுக்கு உதவ, 200 கோடி டாலர்கள் அளவுக்கு, நிதி உதவி அமைப்பு ஒன்றை, தனது மத்திய வங்கியான ரிசர்வ் வங்கியின் மூலம் உருவாக்கியிருக்கிறது இந்தியா.
இதன்மூலம், அண்டை நாடுகள், இந்தியாவின் ரிசர்வ் வங்கியை அணுகி நிதி உதவி பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தப் புதிய கடன் வசதி அமைப்பு, அண்டை நாடுகளிடையே, இந்தியா தனது செல்வாக்கை வளர்த்துக்கொள்ளும் நோக்கிலானது என்று கூறப்படுகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்த இந்திய வெளியுறவுத்துறையின் முன்னாள் செயலர் நீலகண்டன் ரவி, இந்நடவடிக்கையானது, அண்டை நாடுகளுடன் இந்திய உறவுகள் மேம்பட உதவும் என்று கூறினார்.








All the contents on this site are copyrighted ©.