செல்லிடப் பேசி ஆபத்து : ஆண்டுக்கு 5 ஆயிரம் பேர் பலி
மே 21,2012. செல்லிடப் பேசியில் பேசியபடியும், எஸ்.எம்.எஸ்., அனுப்பியபடியும் வாகனங்களில்
பயணம் செய்வதால் ஏற்படும் விபத்துக்களால் அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் 5000 க்கும்
மேற்பட்டோர் பலியாகி வருகின்றனர் என அண்மை ஆய்வு ஒன்று கூறுகிறது. இவர்களில் இளம்
வயதினர் அதிகளவில் பலியாகியுள்ளதாகவும், மேலும், வாகன ஓட்டுனரின் அருகில் அமர்ந்து செல்லிடப்
பேசியில் பேசியபடி வரும் வாடிக்கையாளர்களாலும் ஓட்டுனரின் கவனம் சிதறி விபத்துக்கள் ஏற்படுவதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.