இராஜஸ்தான் மாநில சிறுபான்மை ஆணையத்தின் உறுப்பினராக ஓர் அருள்சகோதரி
மே19,2012. இந்தியாவின் இராஜஸ்தான் மாநில சிறுபான்மை ஆணையத்தின் உறுப்பினராக ஒரு கத்தோலிக்க
அருள்சகோதரியை நியமித்துள்ளது அம்மாநில அரசு. வட இந்தியாவில் இத்தகைய நியமனம் முதன்
முறையாக இடம் பெற்றுள்ளதாகவும் ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது. ஆஜ்மீர் மறைபோதக அருள்சகோதரிகள்
சபையைச் சேர்ந்த அருள்சகோதரி Mariola Sequeira இராஜஸ்தான் மாநில சிறுபான்மை ஆணையத்தின்
உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆஜ்மீரிலுள்ள புகழ்மிக்க சோஃபியா கல்லூரியில்
ஆங்கிலம் கற்பிக்கும் சகோதரி Mariola Sequeira, குடியுரிமை சுதந்திரத்திற்கான மக்கள்
கழகத்தில் உறுப்பினராகவும், இந்தியத் திருஅவையின் சிறைப்பணி அமைப்பின் ஒருங்கிணைப்பாளராகவும்
செயல்பட்டு வருகிறார்.