2012-05-18 15:49:25

குழந்தை பிறப்பின் போது இடம்பெறும் அன்னையர் இறப்புக்களின் எண்ணிக்கையில் நைஜீரியா, இந்தியா முதலிடம்


மே 18,2012. உலகில் 2010ம் ஆண்டில் குழந்தை பிறப்பின் போது 2,87,000 பெண்கள் இறந்தனர், இவ்வெண்ணிக்கையில் ஐந்தில் ஒரு பாகம் இந்தியாவில் இடம் பெற்றுள்ளது என்று ஐ.நா. வெளியிட்ட புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது.
மொத்த எண்ணிக்கையில் 33 விழுக்காடு இந்தியாவிலும் நைஜீரியாவிலும் இடம் பெற்றுள்ளது, இதில் சுமார் 19 விழுக்காடு இந்தியாவில் இடம் பெற்றுள்ளது என்றும் அவ்வறிக்கை கூறுகின்றது.
1990ம் ஆண்டில் இடம் பெற்ற இறப்புக்களைவிட இவ்வெண்ணிக்கை 47 விழுக்காடு குறைவு என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட வளர்ச்சி அடையாத 80 நாடுகளில் இந்தியா 76 ம் இடத்தில் அமைந்துள்ளது என்றும் அவ்வறிக்கை கூறுகின்றது.








All the contents on this site are copyrighted ©.