பிரித்தானியப் பாராளு மன்றத்தில் பாகிஸ்தான், எகிப்து ஆகிய நாடுகளில்
கிறிஸ்தவப் பெண்கள் அனுபவிக்கும் கொடுமைகளைப்பற்றி அறிக்கை
மே,17,2012. பாகிஸ்தானிலும் எகிப்திலும் உள்ள கிறிஸ்தவப் பெண்கள் தங்கள் மத நம்பிக்கையின்
அடிப்படையிலும் பெண்கள் என்ற பாலின பாகுப்பாடு காரணமாகவும் ஒடுக்கப்படுகின்றனர் என்று
பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் Lord Alton கூறினார். பாகிஸ்தான், எகிப்து ஆகிய
நாடுகளில் கிறிஸ்தவர்கள், முக்கியமாக பெண்கள் அனுபவிக்கும் கொடுமைகளைப்பற்றி Aid To The
Church In Need என்ற கத்தோலிக்க பிறரன்பு அமைப்பு உருவாக்கியுள்ள ஓர் அறிக்கை இச்செவ்வாயன்று
மாலை பிரித்தானியப் பாராளு மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. உலகின் 13 நாடுகளில் கிறிஸ்தவர்கள்
அனுபவித்து வரும் கொடுமைகளைப் பற்றிய விவரங்கள் அடங்கிய இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட
வேளையில், இரு பேராயர்களும், வன்முறைகளை அன்புவித்த ஒரு பாகிஸ்தான் பெண்ணும் தங்கள் எண்ணங்களைப்
பாராளுமன்றத்தில் எடுத்துரைத்தனர். எகிப்தில் கிறிஸ்தவப் பெண்கள் சந்திக்கும் பாலியல்
வன்முறைகள், குடும்பங்களில் அடிமைகள் போல் நடத்தப்படுதல் ஆகியப் பிரச்சனைகளை காப்டிக்
கத்தோலிக்கப் பேராயர் Joannes Zakaria விளக்கினார். பாகிஸ்தானில் வளர்ந்து வரும் அடிப்படைவாத
இஸ்லாமியத் தாக்கங்களைக் குறித்தும் அதன் விளைவாக சிறுபான்மை கிறிஸ்தவர்கள், அதிலும்
சிறப்பாக கிறிஸ்தவப் பெண்கள் சந்திக்கும் வன்முறைகளைக் குறித்தும் பிரித்தானியப் பாராளு
மன்றத்தில் விளக்கிக் கூறினார் கராச்சிப் பேராயர் Joseph Coutts.