2012-05-17 15:32:47

திரிபுரா மாநிலத்தில் முதல் கத்தோலிக்க மருத்துவமனை


மே,17,2012. இந்தியாவின் திரிபுரா மாநிலத்தில் கட்டப்பட உள்ள முதல் கத்தோலிக்க மருத்துவமனைக்கு இவ்வியாழனன்று அடிக்கல் நாட்டப்பட்டது.
திரிபுரா மாநிலத்தின் தலைநகரான Agartalaவின் புறநகர் பகுதியில் அமையவுள்ள புனித யோசேப்பு மருத்துவமனையின் அடிக்கல்லை ஆயர் Lumen Monteiro அர்ச்சித்தார்.
36 இலட்சம் மக்களைக் கொண்ட திரிபுரா மாநிலத்தில் மக்களுக்குப் பணியாற்ற மூன்றே மருத்துவமனைகள் உள்ளன என்றும், புனித யோசேப்பு மருத்துவ மனை அப்பகுதி மக்களுக்குப் பெரிதும் தேவையான பணி செய்யும் என்றும் இவ்விழாவில் கலந்துகொண்ட அருள்சகோதரி Janet Tellis கூறினார்.
Annecyயின் புனித யோசேப்பு என்ற துறவுச் சபையின் சகோதரிகள் நடத்தவுள்ள இந்த மருத்துவமனையில் தரமான மருத்துவப் பணியை மேற்கொள்ள இருப்பதாக அருள்சகோதரிகளின் தலைவி Pauline கூறினார்.








All the contents on this site are copyrighted ©.