கருவில் வளரும் குழந்தைக்கான அமெரிக்க ஆயர்களின் செபம்
மே 12,2012. கருவில் வளரும் குழந்தை, அதன் கர்ப்பிணித்தாய், அதன் தந்தை மற்றும் அதன்
முழுக் குடும்பத்தையும் ஆசீர்வதிக்கும் செபம் ஒன்றை வெளியிட்டுள்ளனர் அமெரிக்க ஐக்கிய
நாட்டு ஆயர்கள். மே மாதம் 2ம் ஞாயிறு கடைப்பிடிக்கப்படும் அன்னையர் தினத்தைக் கண்முன்
கொண்டு வெளியிடப்பட்டுள்ள இச்செபம், தாயாகும் வியப்புமிகு மகிழ்ச்சியைக் கடவுள் கர்ப்பிணிப்
பெண்ணுக்கு அளித்துள்ளார் என்று கூறுகிறது. “தாய் வயிற்றிலுள்ள குழந்தையை ஆசீர்வதிக்கும்
செப முறை” என்ற தலைப்பில் கையேடாகவும், அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் இணையதளத்திலும்
அது வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தச் செபம், பிறக்கவிருக்கும் குழந்தையை எதிர்நோக்கியிருக்கும்
பெற்றோருக்கும், அக்குழந்தைக்கும் ஆதரவாக இருப்பதோடு, தொடக்க முதல் இயற்கையான மரணம் அடையும்
வரை மனித வாழ்வின் தூய்மைக்கும் சான்றாக இருக்கின்றது என்று, அமெரிக்க ஆயர் பேரவையின்
திருவழிப்பாட்டு ஆணையத் தலைவர் பேராயர் Gregory M. Aymond கூறினார். மே 13, இஞ்ஞாயிறன்று
அன்னையர் தினம் கடைப்பிடிக்கப்படுகின்றது