ஒலிம்பிக் தீபம் கிரேக்க நாட்டின் Olympiaவில் ஏற்றப்பட்டது
மே,10,2012. இவ்வாண்டு இலண்டன் மாநகரில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் பயன்படுத்தப்படும்
ஒலிம்பிக் தீபம் கிரேக்க நாட்டின் Olympiaவில் இவ்வியாழனன்று ஏற்றப்பட்டு, தன் பயணத்தைத்
துவங்கியது. கிரேக்க நாட்டில் தற்போது நிலவி வரும் அமைதியற்றச் சூழலில், பலத்தப் பாதுகாப்புடன்
ஏற்றப்பட்ட இந்தத் தீபம், மே மாதம் 18ம் தேதி பிரித்தானிய நாட்டில் தனது 70 நாள் பயணத்தைத்
துவக்கும் என்று BBC ஊடகம் கூறியுள்ளது. Olympiaவில் உள்ள Hera என்ற பழமைவாய்ந்த இடிந்த
கோவிலில் சூரியனின் கதிர்களை ஒரு கண்ணாடியின் மூலம் குவியச்செய்து நெருப்பு உருவாக்கி,
ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது 1896 ம் ஆண்டு தற்காலத்திய ஒலிம்பிக் போட்டிகள் துவக்கப்பட்ட
ஏதென்ஸ் நகரத்திலிருந்து ஒவ்வொரு முறையும் இந்த ஒலிம்பிக் ஒளி விளக்கு வெவ்வேறு நாடுகளுக்குப்
பயணத்தை மேற்கொள்கிறது.