2012-05-08 15:03:31

மொசாம்பிக்கில் கத்தோலிக்க அருள்தந்தை ஒருவர் கொலை


மே 08,2012. தென்கிழக்கு ஆப்ரிக்க நாடான மொசாம்பிக்கில் Consolata மறைபோதக அருள்தந்தை ஒருவர் ஆயுதம் தாங்கிய கும்பலால் கடந்த வாரத்தில் கொடூரமாய்க் கொலை செய்யப்பட்டுள்ளார்.
48 வயதாகும் Valentim Camale என்ற அருள்தந்தையின் Liqueleva பங்கில், ஆயுதங்களுடன் திருடச் சென்ற நான்கு பேர் அவரைக் கொடூரமாய்க் குத்திக் கொலை செய்துள்ளனர்.
மொசாம்பிக்கில் பிறந்த அருள்தந்தை Valentim Camale, 1983ம் ஆண்டு கொன்சலாத்தா துறவு சபையில் சேர்ந்தார். 2000மாம் ஆண்டில் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.








All the contents on this site are copyrighted ©.