பிரிட்டனில் சமய சுதந்திரத்திற்கு அழைப்பு விடுக்கும் சர்வதேச நிகழ்ச்சி
மே 05,2012. இம்மாதம் 17ம் தேதி பிரிட்டனில் நடைபெறவிருக்கும் சமய சுதந்திரத்திற்கு அழைப்பு
விடுக்கும் நிகழ்ச்சி ஒன்றில், கிறிஸ்தவர்கள் நசுக்கப்படும் நாடுகளின் ஆயர்களும் கலந்து
கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலண்டன் Westminster பேராலயத்தில் நடைபெறும்
இந்நிகழ்ச்சியில், இந்தியா, பாகிஸ்தான், ஈராக், எகிப்து, நைஜீரியா போன்ற நாடுகளின் ஆயர்களும்
கலந்து கொண்டு சமய சுதந்திரத்திற்கு அழைப்பு விடுக்கவுள்ளனர். இங்கிலாந்து மற்றும்
வேல்ஸ் ஆயர் பேரவையின் சர்வதேச விவகார ஆணையத் தலைவர் ஆயர் Declan Lang, Westminster பேராலயத்தில்
திருப்பலி நிகழ்த்தி இதனைத் தொடங்கி வைப்பார். இந்நிகழ்ச்சியில் சமய சுதந்திரத்தின்
அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் மற்றும் நசுக்கப்படும் கிறிஸ்தவர்களின்
சாட்சியங்களும் வழங்கப்படும் என அறிவி்க்கப்பட்டுள்ளது.