2012-05-04 15:26:00

கொரியாவில் கத்தோலிக்கத் திருஅவை தொடர்ந்து வளர்ந்து வருகின்றது


மே 04,2012. தென் கொரியாவில் 2011ம் ஆண்டில் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட வயது வந்தோர் திருமுழுக்குப் பெற்றனர் என்று கொரிய கத்தோலிக்க ஆயர் பேரவை வெளியிட்ட புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
அந்நாட்டில் 2011ம் ஆண்டில் 1,34,562 பேர் திருமுழுக்குப் பெற்றனர். இத்துடன் அந்நாட்டில் கத்தோலிக்கரின் எண்ணிக்கை 53 இலட்சமாக உயர்ந்துள்ளது என்று அந்தப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
தென் கொரிய மக்கள் தொகையில் கத்தோலிக்கர் 10.3 விழுக்காடாகும்.







All the contents on this site are copyrighted ©.