2012-05-01 15:04:09

மே 13ம் தேதி இத்தாலிய நகரங்களில் திருத்தந்தையின் ஒரு நாள் மேய்ப்புப்பணி பயணம்


மே,01,2012. ஆழ்நிலை தியானங்களுக்கும், துறவு மடங்களுக்கும் புகழ்பெற்ற மூன்று இத்தாலிய நகரங்களில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் இம்மாதம் 13ம் தேதி ஞாயிறன்று ஒரு நாள் மேய்ப்புப்பணி பயணம் மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மே 13, ஞாயிறு காலை 10 மணிக்கு Arezzo என்ற ஊரில் திருப்பலி நிறைவேற்றும் திருத்தந்தை, La Verna நகரில் அசிசி நகர் புனித பிரான்சிஸ் ஆழ்நிலை தியானத்தில் ஈடுபட்டிருந்த ஐந்து திருக்காயங்கள் திருத்தலத்திற்கும், 'புனித முகம்' ("Santo Volto") என்ற புகழ்பெற்ற சிலுவை வைக்கப்பட்டுள்ள San sepolcro நகரின் பேராலயத்திற்கும் செல்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இப்பகுதிகளில் பணியாற்றும் புனித பிரான்சிஸ், புனித கிளாரா துறவுச் சபை சகோதரர்களையும், அருள்சகோதரிகளையும் திருத்தந்தை சந்திப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.