மே01,2012. உலகளவில் 15 விழுக்காட்டினரும், இந்தியா போன்ற வளரும் நாடுகளில் 18 விழுக்காட்டுக்
குழந்தைகளும் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. 6 முதல்
12 வயதுக்கு உட்பட்டோரிடம் இந்நோய்த் தாக்கம் அதிகம் இருப்பதாகவும், ஆரம்ப காலத்திலேயே
சிகிச்சை பெற்றால் இதிலிருந்து விடுபடலாம் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். சுற்றுச்சூழல்
சீர்க்கேட்டினால் ஏற்படும் தூசி, புகை, புழுதி, மாசு போன்றவைகளால் ஆஸ்துமா எனும் நுரையீரல்
நோய் ஏற்படுகின்றது. ஒருவித ஒவ்வாமையால் மூச்சுக் குழாய் தடித்து வீக்கம் ஏற்படும் போது,
மூச்சுவிட கஷ்டமாக இருப்பதே ஆஸ்துமா ஆகும். எடை குறைவாக பிறக்கும் குழந்தைகள், உடல்
பருமன், உடற்பயிற்சியின்மை, விழிப்புணர்வின்மை, சரிவிகித உணவின்மை, நோய் எதிர்ப்பு சக்தியின்மை,
மாசடைந்த சுற்றுச்சூழல், மனஅழுத்தம், மரபணு ஆஸ்துமா, புகை, தூசி போன்ற மாசுகள் இந்நோய்க்கு
ஆபத்தான காரணிகளாகும்.