2012-05-01 15:05:44

திருத்தந்தை 2ம் ஜான் பால் அருளாளராக உயர்த்தப்பட்டதன் முதலாமாண்டு


மே01,2012. பற்றுறுதி, அன்பு, துணிவு ஆகிய பண்புகளுக்கு அருளாளர் திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் வாழ்வில் வெளிப்பட்ட வீரத்துவமானச் சாட்சியம், அனைத்து விசுவாசிகளும் தங்களை கிறிஸ்தவர்கள் என்று பயப்படாமல் சொல்லிக் கொள்வதற்கு உதவியுள்ளது என்று அயர்லாந்து தலத்திருஅவைத் தலைவர் கர்தினால் Seán Brady கூறினார்.
மே 01, இச்செவ்வாயன்று திருத்தந்தை 2ம் ஜான் பால் அருளாளராக உயர்த்தப்பட்டதன் முதலாமாண்டு நிறைவடைவதையொட்டி செய்தி வெளியிட்ட Armagh பேராயர் கர்தினால் Brady, இத்திருத்தந்தையின் சாட்சிய வாழ்வு, உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள் பயப்படாமல் நற்செய்தியை அறிவிப்பதற்கும், திருஅவையில் பயப்படாமல் இருப்பதற்கும் உதவியுள்ளது என்று கூறினார்.
2011ம் ஆண்டு மே 01ம் தேதி வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில், திருத்தந்தை 2ம் ஜான் பால் அருளாளராக உயர்த்தப்பட்ட திருப்பலியில் சுமார் 15 இலட்சம் பேர் கலந்து கொண்டனர்.








All the contents on this site are copyrighted ©.