2012-05-01 15:07:55

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் கியூபாவுக்கானத் திருப்பயணம், கத்தோலிக்கத் திருஅவையில் மக்களின் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது - ஆயர்கள்


மே01,2012. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கடந்த மார்ச் மாதத்தில் கியூபாவுக்கு மேற்கொண்ட திருப்பயணம், கத்தோலிக்கத் திருஅவையில் மக்களின் ஆர்வத்தைத் தட்டி எழுப்பியுள்ளது என்று அந்நாட்டு ஆயர்கள் கூறினர்.
அமெரிக்க ஐக்கிய நாட்டு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் கியூபாவில் திருஅவையின் பங்கு குறித்து பேசிய ஹவானா கர்தினால் ஹைமே ஒர்த்தேகா அலமினோ, கியூபா அரசோடு சேர்ந்து பணி செய்வதற்கானத் திருஅவையின் முயற்சிகள் புத்துணர்வு பெற்றுள்ளன என்றும் கூறினார்.
கியூபாவில், விசுவாச வாழ்வின் வசந்த காலத்தைத் திருஅவை வாழ்ந்து கொண்டிருக்கின்றது என்றுரைத்த கர்தினால் ஒர்த்தேகா, திருத்தந்தையின் அடக்கமும் கனிவும் மக்களைப் பெரிதும் ஈர்த்துள்ளன என்றும் தெரிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.