ஏப்ரல்,30,2012. இரஷ்யா தன்வசம் வைத்திருந்த ஏறத்தாழ 25 ஆயிரம் மெட்ரிக் டன் வேதிப்பொருள்
ஆயுதங்களை அழித்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகம் முழுவதும் வேதிப்பொருள்
ஆயுதங்களை பயன்படுத்தவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இரஷ்யா கடந்த 15 ஆண்டுகளாக
தன் வசம் வைத்திருந்த வேதிப்பொருள் ஆயுதங்களை சிறிது சிறிதாக அழித்து வருவது குறிப்பிடத்தக்கது. தற்போதைய
நிலவரப்படி சுமார் 62 விழுக்காடு அளவிற்கு ஆயுதங்களை அழிக்கப்பட்டு விட்டதாகவும், மீதமுள்ளவைகள்
வரும் 2015ஆம் ஆண்டிற்குள் 100 விழுக்காடு அளவிற்கு அழித்து விட முடிவு செய்துள்ளதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.