2012-04-28 14:57:54

திருத்தந்தை : உரோம் மறைமாவட்டத்திற்கென எட்டு தியோக்கன்களுக்கு குருத்துவத் திருநிலைப்பாடு


ஏப்ரல்28,2012. 49வது அனைத்துலக இறையழைத்தல் தினமான இஞ்ஞாயிறன்று ஒன்பது தியோக்கன்களுக்கு குருத்துவத் திருநிலைப்பாடு வழங்கவுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
உரோம் மறைமாவட்ட ஆயராகிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காவில் இஞ்ஞாயிறு காலை நிகழ்த்தும் திருப்பலியில், உரோம் மறைமாவட்டத்திற்கென எட்டு பேர், வியட்நாமின் Bui Chu மறைமாவட்டத்திற்கென ஒருவர் என ஒன்பது தியோக்கன்களுக்கு குருத்துவத் திருநிலைப்பாடு வழங்கவுள்ளார்.
இவர்களில் உரோம் நகரைச் சேர்ந்த 29 வயது Marco Santarelli என்பவர் ஒரு தனியார் விமான ஓட்டுனராக வேலை செய்தவர். இவர் அருளாளர் 2ம் ஜான் பால், 2002ம் ஆண்டில் உலக இளையோர் தினத்தில் இளையோருக்கு விடுத்த அழைப்பைக் கேட்டு குருத்துவ வாழ்வைத் தேர்ந்தெடுத்தவர்.
“இறையழைத்தல் இறைவனின் கொடை” என்ற தலைப்பில் இந்த 49வது அனைத்துலக இறையழைத்தல் தினத்திற்கென ஏற்கனவே செய்தியும் வெளிட்டியிருக்கிறார் திருத்தந்தை.








All the contents on this site are copyrighted ©.