இந்திய நலவாழ்வில் காணப்படும் வளர்ச்சிக்கு ஐ.நா.பொதுச் செயலர் பாராட்டு
ஏப்ரல்,27,2012: இந்திய நலவாழ்வில் காணப்படும் வளர்ச்சி குறித்துப் பாராட்டிய அதேவேளை,
பெண்கள் மற்றும் சிறாரின் நல்வாழ்வை மேம்படுத்துவதிலும் மிகுந்த அக்கறை காட்டப்படுமாறு
ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார். இந்திய நலவாழ்வு மற்றும் குடும்பநல அமைச்சர்
Ghulam Nazi Azad ஐ புதுடெல்லியில் சந்தித்துப் பேசிய பான் கி மூன், ஒருகாலத்தில் போலியோ
நோயின் மையமாக நோக்கப்பட்ட இந்தியாவில், கடந்த ஓராண்டுக்கும் மேலாக அந்நோயால் யாரும்
புதிதாகப் பாதிக்கப்படவில்லை என்பதைக் குறிப்பிட்டார். 2011க்கும் 2015க்கும் இடைப்பட்ட
காலத்தில், 5 வயதுக்கு உட்பட்ட ஒரு கோடியே 50 இலட்சத்துக்கு மேற்பட்ட சிறாரின் இறப்பைத்
தடுத்தல், சுமார் 3 கோடியே 30 இலட்சம் கருக்கலைப்புக்களைத் தடுத்தல், கர்ப்பம் தொடர்புடைய
7 இலட்சத்து 40 ஆயிரம் பெண்களின் இறப்பைத் தடுத்தல் ஆகிய திட்டங்களுக்கென நான்காயிரம்
கோடி டாலர் திட்டத்தை 2010ல் ஐ.நா.பொதுச் செயலர் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.