2012-04-27 15:10:45

1. திருப்பீட குருக்கள் பேராயம் : தூய்மையான வாழ்வு வாழ வேண்டியது அருட்பணியாளர்களின் கடமை


ஏப்ரல்,27,2012: தூய்மையான வாழ்வு வாழ வேண்டியது அருட்பணியாளர்களின் கடமை என்பதை உலகின் அனைத்து அருட்பணியாளர்களுக்கும் நினைவுபடுத்தியுள்ளது திருப்பீட குருக்கள் பேராயம்.
வருகிற ஜூன் 15ம் தேதியன்று கடைப்பிடிக்கப்படும் அனைத்து அருட்பணியாளர்களின் தூய வாழ்வுக்காகச் செபிக்கும் அனைத்துலக நாளையொட்டி செய்தி வெளியிட்ட திருப்பீட குருக்கள் பேராயம் இவ்வாறு கூறியுள்ளது.
இப்பேராயத் தலைவர் கர்தினால் Mauro Piacenza, அதன் செயலர் பேராயர் Celso Morga Iruzubieta ஆகியோர் கையெழுத்திட்டு வெளியிடப்பட்டுள்ள இச்செய்தி, அருட்பணியாளர்கள் தூயவர்களாக வாழ வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.
"நீங்கள் தூயோராவதே கடவுளுடைய திருவுளம்" (1தெச.4:3) என்ற தூய பவுலின் திருச்சொற்களை மையமாக வைத்து அமைந்துள்ள இச்செய்தி, அருட்பணியாளர்கள் தங்களது அன்றாட வாழ்வு மற்றும் பணியில் எப்பொழுதும் மூவொரு இறைவனின் பிணைப்பைப் பின்பற்றி வாழுமாறு வலியுறுத்தியுள்ளது.
இறையழைத்தல்களுக்காகச் செபிக்கவும் இத்திருப்பீடச் செய்தி கேட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.