2012-04-26 13:51:01

நேர்காணல் – இறையழைத்தல் அனுபவம்


ஏப்.26,2012. அன்பு நேயர்களே, ஏப்ரல் 29 வருகிற ஞாயிறு, 49வது இறையழைத்தல் தினம். பாஸ்கா கால நான்காம் ஞாயிறாகிய இத்தினம் நல்லாயன் ஞாயிறு எனவும் அழைக்கப்படுகிறது. குருத்துவ மற்றும் துறவு வாழ்வுக்கு நல்ல இளம் உள்ளங்கள் தங்களை அர்ப்பணிக்க வேண்டுமென்று இத்தினத்தில் நாம் சிறப்பாகச் செபிக்குமாறு திருஅவை அழைப்பு விடுக்கிறது. இறையழைத்தல்கள், இறையன்பின் கொடை என்ற தலைப்பில் திருத்தந்தையும் இந்நாளுக்கென செய்தி வெளியிட்டுள்ளார். இந்நாளை முன்னிட்டு இயேசு சபை அருள்தந்தை அருள்ஒளி தனது இறையழைத்தல் அனுபவத்தைத் தொலைபேசி வழியாக நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். இவர் இயேசு சபையில் சேர்ந்து 20 ஆண்டுகளும் குருவாகி ஏழு ஆண்டுகளும் ஆகின்றன. அருள்தந்தை அருள்ஒளி, மதுரை மாவட்டம், இராயபுரம் புனித ஜெர்மேனம்மாள் ஆலய உதவிப் பங்குத்தந்தையாகப் பணியாற்றுகிறார். RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.