2012-04-25 15:14:48

ஏப்ரல் 25, 2012. – கவிதைக் கனவுகள்............. அறிவே தெய்வம் என்கிறார் மகாகவி


ஆயிரந் தெய்வங்கள் உண்டென்று தேடி
அலையும் அறிவிலிகாள்!-பல்
லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண்
டாமெனல் கேளீரோ?

மாடனைக் காடனை வேடனைப் போற்றி
மயங்கும் மதியிலிகாள்!-எத
னூடும்நின் றோங்கும் அறிவொன்றே தெய்வமென்
றோதி யறியீரோ?








All the contents on this site are copyrighted ©.