கார்காலம் காணுமிடமெல்லாம் தண்ணீர். களனியும் கண்மாயும் குளமும் குட்டையும் காய்ந்துபோன
களிமண் தரையும் தண்ணீரில். ஆற்றில் நொடிக்கு நொடி புதுத் தண்ணீர் கவனித்துக்
கொண்டிருந்த குயில் கூவியது.... இதுவும் மாறும் மாறிக் கொண்டே இருப்பது இயற்கையின்
இயல்பு
தொடர் மழையில் குடும்பமிழந்த குருவி கேட்டது குயிலிடம்... இதுவும்
மாறுமா இந்த இழப்பும் மாறுமா மாறுவது வாழ்க்கை இழப்பும் இன்பமும் மாறி மாறி வரும்
பழையது போய் புதியது கிடைக்கும் தத்துவம் சொன்னது குயில்.
குயில் தொடர்ந்தது
தத்துவப் பாடலை.... விடியாத இரவுகள் இல்லை முடிவடையாத் துன்பங்கள் இல்லை நிலைத்த
இன்பங்கள் இல்லை எல்லாமே மாறும் வாழ்க்கையில் என்ன நேர்ந்தாலும் பற்றிக்கொள் பற்றற்றானை....