2012-04-21 14:35:12

புதிய நற்செய்திப் பணிக்கு அன்னை தெரேசா மீது அன்பு தேவை – பேராயர் டி சூசா


ஏப்.21,2012: இந்தியாவில் கிறிஸ்தவ மறைப்பணியாளர்கள் தங்களது பிறரன்புப் பணிகள், மிகவும் வசதி குறைந்த பகுதிகளிலுள்ள பள்ளிகள், மருத்துவமனைகள், தொழுநோயாளர் குடியிருப்புகள் ஆகியவை மூலம் மதமாற்றம் செய்கிறார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டு பலவகையான அடக்குமுறைகளால் துன்புறுகின்றனர் என்று பேராயர் Henry D'Souza கூறினார்.
இந்தியாவில் மறைப்பணி மற்றும் அது எதிர்நோக்கும் இன்னல்கள் பற்றிய சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்ட கல்கத்தாவின் முன்னாள் பேராயராகிய டி சூசா, அருளாளர் அன்னை தெரேசாவின் எடுத்துக்காட்டான வாழ்வு பற்றிய சிந்தனைகளையும் பகிர்ந்து கொண்டார்.
மதமாற்றக் குற்றச்சாட்டுகள் மற்றும் பல இன்னல்களுக்கு மத்தியிலும் மறைப்பணியைத் திறம்பட எடுத்துச் செய்வதற்கு இறையன்பும் பிறரன்பும் மிகவும் உதவுகின்றன என்றும் பேராயர் கூறினார்.
அன்னை தெரேசாவுடன் சுமார் 35 ஆண்டுகள் பணி செய்துள்ள பேராயர் டி சூசா, அன்னை தெரேசா கொண்டிருந்த இறையன்பே அவரது மறைப்பணிக்கு உதவியாக இருந்தது என்று தெரிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.