ஏப்.21,2012: மேற்கு ஆப்ரிக்க நாடான Guinea-Bissau வில் இடம் பெற்ற இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பைப்
புறக்கணித்துள்ள அதேவேளை, மக்களாட்சியை மதித்து அமைதியான முறையில் பிரச்சனைகளுக்குத்
தீர்வு காணுமாறு அந்நாட்டு ஆயர்கள் வலியுறுத்தியுள்ளனர். Guinea-Bissau வின் இடைக்கால
அரசுத்தலைவர் Raimundo Pereira மற்றும் முன்னாள் பிரதமர் Carlos Gomes Jr.டமிருந்து இராணுவ
அதிகாரிகள் ஆட்சியைக் கைப்பற்றிய 5 நாள்களுக்குப் பின்னர் அறிக்கை வெளியிட்ட ஆயர்கள்,
நாடு மிகவும் கடுமையான பிரச்சனையை எதிர்நோக்கியுள்ளது என்று கூறியுள்ளனர். தேர்தல்
இடம் பெறுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் இடம் பெற்றுள்ள இந்த இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு,
அந்நாட்டின் சுமார் 16 இலட்சம் மக்களுக்குப் பிரச்சனைகளையும் துன்பங்களையும் கொண்டு வரும்
என்று கூறியுள்ளனர் ஆயர்கள். 1974ம் ஆண்டு போர்த்துக்கல் நாட்டிலிருந்து சுதந்திரம்
அடைந்த Guinea-Bissau என்ற சிறிய நாட்டுக்கு இராணுவ ஆட்சிக்கவிழ்ப்புகளும், இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு
முயற்சிகளும் பழக்கப்பட்ட நடவடிக்கை என்று ஊடகங்கள் கூறுகின்றன.