2012-04-20 15:32:25

திருத்தந்தை : புனித திருமறை நூல்கள் அவற்றின் இயல்புக்கு ஒத்தவகையில் விளக்கம் அளிக்கப்பட வேண்டும்


ஏப்.20,2012. புனித திருமறை நூல்கள் அவற்றின் இயல்புக்கு ஒத்தவகையில் விளக்கம் அளிக்கப்பட வேண்டியது திருஅவையின் வாழ்வுக்கும் பணிக்கும் இன்றியமையாததும் அடிப்படையானதுமாகும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
வத்திக்கானில் இவ்வெள்ளியன்று ஐந்து நாள்கள் ஆண்டுக் கூட்டத்தை நிறைவு செய்துள்ள பாப்பிறை விவிலியக் கழகத்துக்குச் செய்தி அனுப்பியிருந்த திருத்தந்தை, இவ்விவிலியக் கழகத்தின் தரமான ஆய்வுகளின் அவசியம் குறித்து சுட்டிக் காட்டியுள்ளார்.
“விவிலியத்தின் உள்தூண்டுதலும் உண்மையும்” என்ற இக்கூட்டத்தின் தலைப்பை மையமாக வைத்து அமைந்திருந்த திருத்தந்தையின் இச்செய்தி, புனித நூல்களின் தூண்டுதலைப் புறக்கணித்து அல்லது அதனை மறந்து அவற்றுக்கு அளிக்கப்படும் விளக்கங்கள், அவற்றின் மிக முக்கியமான மற்றும் மதிப்பு மிக்க கூறைக் கவனத்தில் எடுக்கவில்லை என்று கருதப்படும் என்று கூறுகிறது.
திருத்தந்தையின் இச்செய்தி, பாப்பிறை விவிலியக் கழகத்தின் தலைவர் கர்தினால் வில்லியம் லெவாடாவுக்கு அனுப்பப்பட்டது.







All the contents on this site are copyrighted ©.