2012-04-19 15:16:24

சூடானுக்கும், தென் சூடானுக்கும் இடையே போர் மூழும் சூழல் அதிகரித்துள்ளது - தென் சூடான் தலத் திருஅவை கவலை


ஏப்ரல்,19,2012. சூடானுக்கும், தென் சூடானுக்கும் இடையே போர் மூழும் சூழல் அதிகரித்துள்ளது என்றும், ஐ.நா.வின் பாதுகாப்பு அவை முயற்சிகள் எடுக்கவில்லை எனில் எந்நேரமும் போர் துவங்கும் என்றும் தென் சூடான் தலத் திருஅவை தன் கவலையை வெளியிட்டுள்ளது.
2011ம் ஆண்டு ஜூலை மாதம் சூடானிலிருந்து தென் சூடான் தனி நாடாகப் பிரிந்தது. இவ்விரு நாடுகளிடையே எல்லையைப் பிரிப்பதிலும், எண்ணெய் கிணறுகளைக் கைப்பற்றுவதிலும் தொடர்ந்து நிலவிவரும் பிரச்சனைகள் தற்போது ஒரு முழு வடிவ போராக மாறக்கூடும் என்று ஊடகங்கள் கூறி வருகின்றன.
எண்ணெய் வளம் மிக்க Heglig என்ற பகுதிக்கென இரு நாடுகளும் போராடி வருவது நீடித்து வரும் வேளையில், ஐ.நா. அமைப்பு, மற்றும் பிற நாடுகளின் தலையீட்டால் மட்டுமே இந்தப் பிரச்சனையைப் போரின்றி தீர்க்க முடியும் என்று தலத் திருஅவை Fides செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளது.
இப்பிரச்சனையைத் தீர்ப்பதற்காக, அமெரிக்க ஐக்கிய நாடு ஒரு பிரதிநிதிகள் குழுவை அனுப்பியுள்ளதென்றும், ஆப்ரிக்க ஒன்றியம் இரு நாடுகளுக்கும் வேண்டுகோள்களை அனுப்பியுள்ளதென்றும் Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.