"பேரரசன் கான்ஸ்டன்டைன். ஐரோப்பாவின் வேர்கள்" - வத்திகானில் நடைபெறும் பன்னாட்டுக் கருத்தரங்கு
ஏப்ரல்,18,2012. வரலாற்றியல் பாப்பிறைக் கழகம் ஏற்பாடு செய்துள்ள ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கு
இப்புதன் முதல் சனிக்கிழமை வரை வத்திகானில் நடைபெறுகிறது. பேரரசன் கான்ஸ்டன்டைன் கிறிஸ்தவ
மதத்திற்கு மாறியதன் 17வது நூற்றாண்டு நிறைவடைவதைச் சிறப்பிக்கும் வண்ணம் "பேரரசன் கான்ஸ்டன்டைன்.
ஐரோப்பாவின் வேர்கள்" என்ற தலைப்பில் இக்கருத்தரங்கு, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வத்திக்கான்
இரகசிய ஆவணங்கள் காப்பகம், வத்திக்கான் நூலகம், மிலான் நகரில் உள்ள திரு இருதய கத்தோலிக்கப்
பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு நிறுவனங்கள் இணைந்து நடத்தும் இந்த கருத்தரங்கின் இரண்டாம்
பகுதி வருகிற 2013ம் ஆண்டு மிலான் நகரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 312
மற்றும் 313 ஆண்டுகளில் Maxentius என்ற எதிராளியை கான்ஸ்டன்டைன் மன்னன் வென்றதையும்,
கிறிஸ்தவ மதத்தை அவர் தழுவியதையும் நினைவுகூரும் பல்வேறு நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக
இந்தக் கருத்தரங்குகள் நடைபெறுகின்றன என்று வரலாற்றியல் பாப்பிறைக் கழகத்தின் தலைவர்
அருள்தந்தை Bernard Ardura இச்செவ்வாயன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.